Tuesday, 8 March 2016

ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமமும் சீரடி பாபாவும்

No comments



ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம், ஷீரடி சாய்பாபாவுக்கு நிகழ்த்திய அற்புதம் எண்ணற்ற அற்புதங்களை தன் பக்தர்களின் நலனுக்காக நடத்தி காட்டியவர் மகான் ஷீரடி சாய்பாபா. பக்தர்களின் கர்மாக்களை போக்கும் நம் ஷீரடி சாய்பாபாவுக்கு ஒருநாள் நெஞ்சுவலி ஏற்பட்டது. தமது நெஞ்சுவலி எந்த மருந்தால் நீங்கியது என்பதை பற்றி சாய்பாபா தன் பக்தர்களிடம் பகிர்ந்து கொண்டார். அதை பற்றி பார்ப்போம். ஒருநாள் இராமதாஸர் என்பவர் ஷீரடி சாய்பாபாவை பார்க்க வந்திருந்தார். அவர் எப்போதும் விஷ்ணு சஹஸ்ரநாமம், இராமாயணம் போன்ற நூல்களை கையோடு எடுத்து வருவார். அவரை விட்டு என்றும் அந்த புராண புத்தகங்கள் பிரிந்ததில்லை. எங்கு சென்றாலும் தம் செல்ல பிள்ளைகளைபோல அந்த நூல்களையும் தம்முடன் எடுத்துச் செல்லும் வழக்கம் கொண்டவர் இராமதாஸர். ஒரு சமயம் சாய்பாபா இராமதாஸரிடம், ”எனக்கு வயிற்று வலியாக இருக்கிறது இராம். நீ, நான் சொல்லும் மருந்தை வாங்கி, அதை கஷாயம் செய்து எடுத்து வா” என்றார். சாய்பாபாவின் கட்டளையை ஏற்று, அவர் கையில் இருந்த ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம நூலை அங்கேயே வைத்துவிட்டு, பாபா சொன்ன சூரணத்தை வாங்கி, அதை கஷாயம் செய்து கொண்டு வர சென்றார் இராமதாஸர். இராமதாஸர் வைத்துவிட்டு சென்ற ஸ்ரீவிஷ்ணுசஹஸ்ரநாமம புத்தகத்தை எடுத்த பாபா, அதை ஷாமாவிடம் கொடுத்து, “ஷாமா..இந்தா… இது ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம். இதை நீ படி. இந்த புத்தகத்தையும் நீயே வைத்துக்கொள். இந்த நூலுக்கு ஒரு சக்தி இருக்கிறது. ஒருநாள் எனக்கு நெஞ்சுவலி இருந்தபோது, இந்த புத்தகத்தை என் மார்போடு அணைத்தப்படி உறங்கினேன். என் நெஞ்சுவலி நீங்கியது. இதை நீயே வைத்துக்கொண்டு தினமும் படித்து வா. மனதில் மகிழ்ச்சி எழும். ஆற்றல் கிடைக்கும்.” என்றார் ஷாமாவிடம் சாய்பாபா. இப்படி நோய் தீர்க்கும் ஆற்றல் பல மந்திரங்களுக்கு இருந்தாலும், அதில் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமமும் விசேஷமானது. ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தை உச்சரிக்க உச்சரிக்க அனைத்து வியாதிகளும் நீங்கும் அல்லது ஸ்ரீவிஷ்ணு சஹஸ்நாமத்தை வீட்டில் ஒலிக்கச் செய்தாலும் அந்த “மந்திர ஒலி அலைகள்” வீட்டுக்கும் – அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கும் நன்மைகளை தந்திடும்.!








No comments :

Post a Comment