பாபாவின் ஷீர்டி வாசமும், பிறந்த ஆண்டு பற்றிய அனுமானமும்
சாயிபாபாவின் சரியான பிறந்தநாளையும், அவரது பெற்றோரையும் ஒருவரும் அறியார்கள். அவரது ஷீர்டி வாசத்தில் இருந்து அதை ஏறக்குறையத் தீர்மானிக்கலாம். அவர் பதினாறு வயதுப் பாலகனாக இருக்கும்போது முதலில் ஷீர்டிக்கு வந்தார். மூன்றாண்டுகள் அங்கு தங்கியிருந்தார். பின்னர் திடீரென்று சிலகாலம் மறைந்துவிட்டார். சிறிது காலத்திற்குப்பின் நைஜாம் ஓளரங்கபாத்துக்கு அருகில் இருபது வயது நிரம்பி இருக்கும்போது தோன்றினார். மீண்டும் ஷீர்டிக்கு சாந்த் பாடீலின் கல்யாண கோஷ்டியுடன் திரும்பினார். பின்னர் தொடர்ந்து அறுபது ஆண்டுகள் அவர் ஷீர்டியில் வாழ்ந்தார். அதற்குப் பின்னர் 1918ஆம் ஆண்டில் மஹாசமாதி அடைந்தார். இதில் இருந்து பாபாவின் பிறந்த வருடம் ஏறக்குறைய 1838ஆக இருக்கலாம் என்று கூற இயலும்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment