காகா மகாஜனி:
ஒருமுறை காகா மகாஜனி ஷீர்டிக்கு பம்பாயிலிருந்து சென்றார். அவர் அங்கு ஒருவாரம் தங்கி கோகுலாஷ்டமி பண்டிகையைக் கண்டு மகிழ விரும்பினார். பாபாவின் தரிசனத்தைப் பெற்றவுடனே, பாபா அவரை, "எப்போது வீட்டிற்குத் திரும்பப்போகிறாய்?" எனக் கேட்டார். அவர் இத்தகைய வினாவினால் ஆச்சரியமே அடைந்தாரெனினும் பதில் அளிக்கவேண்டும் என்பதற்காக, பாபா தம்மை அங்ஙனம் செய்ய எப்போது ஆணையிடுகிறாரோ அப்போதே தாம் வீட்டிற்குப் போகப் போவதாகக் கூறினார். பாபா, "நாளைக்குப் போ!" எனக் கூறினார்.
பாபாவின் மொழிகளே சட்டமானதால், அவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். எனவே உடனே காகா மஹாஜனி ஷீர்டியை விட்டுப் புறப்பட்டார். பம்பாயில் தனது அலுவலகத்திற்குச் சென்றபின்னர், தனது எஜமானர் தன்னுடைய வரவுக்காகக் கவலையுடன் காத்திருப்பதை அறிந்தார். எனவே காகாவின் வரவு அவருக்குத் தேவைப்பட்டது. ஷீர்டியில் காகாவுக்கு ஓர் கடிதம் அனுப்பியிருந்தார். பம்பாய்க்கு அது திருப்பி அனுப்பப்பட்டது.

No comments :
Post a Comment