வக்கீல் பாவ் சாஹேப் துமால்:
இப்போது மாறுபாடான ஒரு கதையைக் கேளுங்கள். ஒருமுறை பாவ் சாஹேப் துமால் ஒரு விசாரணைக்காக நிபாட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். வழியில் ஷீர்டிக்குச் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்று உடனே நிபாட்டிற்குச் செல்ல விரும்பினார். ஆனால் பாபா அவரை அங்ஙனம் செய்ய அனுமதிக்கவில்லை. ஒரு வாரமோ, அல்லது அதற்கு மேலோ அவரை ஷீர்டியில் தங்கவைத்தார். இதே நேரத்தில் நிபாட்டில் உள்ள நியாயாதிபதி அடிவயிற்றில் ஏற்பட்ட வலியினால் மிகவும் துன்புற்றார். எனவே, விசாரணை ஒத்திப்போடப்பட்டது. துமால் அங்கு சென்றபின்னரே விசாரணை தொடர்ந்தது. முடிவில் துமால் வெற்றி பெற்றார். அவரது கட்சிக்காரர் குற்றமற்றவராகத் தீர்ப்பளிக்கபட்டார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment