Monday, 27 February 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 10 - பகுதி 7

No comments


பாபாவின் பணிவுடைமை

பரமாத்மா அல்லது கடவுள் ஆறு குணாதிசயங்களை உடையவராகக் கூறப்படுகிறது.  அதாவது புகழ், செல்வம், பற்றின்மை, ஞானம், பேராற்றல், வள்ளன்மை ஆகியவையாகும்.  பாபா இவை அனைத்தையும் தன்னிடத்துடையவராக விளங்கினார்.  இவ்வுடம்பில் அடியவர்களுக்காக அவதரித்தார்.  அவரது அருளும், அன்பும் அதிசயிக்கத்தக்கவை.  ஏனெனில் தமது அடியவர்களைத் தம்மிடம் ஈர்த்து இழுத்தார்.  இல்லாவிடில் யார்தான் அவரை அறிந்திருக்க இயலும்!  அவர் தமது பக்தர்களின் பொருட்டாக வாக்கின் தெய்வம் (சரஸ்வதிதேவி) கூட உரைக்கத் துணியாத அத்தகைய சொற்களை அவர் கூறினார்.  அதற்கு இதோ ஓர் உதாரணம், மிகவும் எளிமையுடன் அவர் கூறியது பின்வர்மாறு.  "நான் அடிமைகளுள் அடிமை.  உங்கள்ளுக்குக் கட்டுப்பட்டவன்.  உங்களது தரிசனத்திலே திருப்தியடைகிறேன்.  தங்களது திருவடிகளைத் தரிசிக்கும் பெரும் பாக்கியம் பெற்றேன்.  நான் தங்களது மலத்திலுள்ள ஒரு புழு.  அங்கனமாகவே என்னை நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாகக் கருதுகிறேன்".

எத்தகைய பணிவுடைமை?!  இதைப் பிரசுரிப்பதன் மூலம் சாயிக்கு எத்தகைய அவமரியாதையாவது செய்யப்பட்டது என்று எவரேனும் நினைப்பாராகில், அவர்களிடம் மன்னிப்பை வேண்டிக்கொள்கிறோம்.  இதற்குப் பிராயச்சித்தமாக பாபாவின் நாமத்தைப் பாடி ஜபிப்போமாக!

பாபா வெளிப்படையாக உணர்ச்சி நுகர்வுக்கூறு மற்றும் பொருட்களால் மகிழ்பவர்போல் தோன்றினாலும், அவருக்கு அவைகளில் எள்ளளவும் தனிச்சுவைத் திறமோ அவைகளை மகிழ்ந்து அனுபவிக்கும் பிரக்ஞையோ இருந்ததில்லை.  அவர் உண்டார் எனினும், சுவை அறியவில்லை.  பார்த்தார் எனினும், பார்த்தவைகளில் அவர் எவ்வித விருப்பையும் உணர்ந்திருக்கவில்லை.  காம உணர்வுகளைப்பற்றிக் கருதும்கால் அவர் ஹனுமானைப் போன்ற பூரண பிரம்மச்சாரியாவார் என்பதாலும் பற்றற்றவராக இருந்தார்.  அவரே தூய உணர்வுகளின் திரளாகவும், ஆசை, கோபம், மற்ற உணர்ச்சிகள் அடங்கி அமைதியுறும் இடமாகவும் திகழ்ந்தார்.  சுருக்கமாக அவர் அவாவற்றவர், கட்டற்றவர், முழு நிறைவானவர்.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                 (தொடரும்…)

No comments :

Post a Comment