Monday, 27 February 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 10 - பகுதி 8

No comments

நானாவலி

ஷீர்டியில் நானாவலி என்ற பெயரில் தனிப்போக்குள்ள விசித்திரமான மனிதன் ஒருவன் இருந்தான்.  அவன் பாபாவின் வேலைகளையும், காரியங்களையும் கவனித்துவந்தான்.  ஒருமுறை அவன், ஆசனத்தில் அமர்ந்திருந்த பாபாவிடம் சென்று, தான் அதில் உட்கார வேண்டியிருப்பதால் பாபாவை எழுந்திருக்கும்படி கூறினான்.  பாபா உடனடியாக எழுந்திருந்து, தாம் அமர்ந்திருந்த ஆசனத்தைக் காலி செய்தார்.  அதில் அவன் அமர்ந்துகொண்டான்.  சிறிது நேரம் அமர்ந்திருந்த பின்னர் அவன் எழுந்திருந்து, பாபாவை அமர்ந்துகொள்ளச் சொன்னான்.  பாபா ஆசனத்தில் அமர்ந்தார்.  பிறகு அவன் பாபாவின் பாதங்களில் வீழ்ந்து நமச்கரித்துவிட்டுச் சென்றுவிட்டான்.  

தாம் அதிகாரம் செலுத்தப்பட்டதிலும், வெளியேற்றப்படதிலும், பாபா எவ்வளவும் வருத்தம் அடையவில்லை.  இந்த நானாவலி, பாபாவை மிகவும் நேசித்தான்.  பாபா மஹாசமாதி எய்திய பதிமூன்றாவது நாள் தாமும் சமாதி அடைந்தான்.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                 (தொடரும்…)

No comments :

Post a Comment