த்ருஷ்டி:-
லக்ஷ்மிசந்த் ஓர் இரவு சாவடி ஊர்வலத்தைக் கண்ணுற்றார். பாபா அப்போது இருமலால் மிகுந்த அல்லல் பட்டுக்கொண்டிருந்தார். பாபாவின் இத்தொல்லை சிலரின் த்ருஷ்டி பட்டதால் இருக்கவேண்டும் என்று நினைத்தார். மறுநாள் காலை அவர் மசூதிக்குச் சென்றபோது பாபா ஷாமாவிடம் "நேற்றிரவு நான் இருமலால் அவதியுற்றேன். அது த்ருஷடினாலோ? சிலரின் த்ருஷடி என்மீது வேலை செய்கிறது. எனவேதான் நான் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன்" என்றார். இவ்விஷயத்தில் லக்ஷ்மிசந்தின் உள்ளத்தில் இருந்ததை பாபா பேசினார்.
பாபாவின் சர்வ வியாபித்துவத்துக்கான இந்த நிரூபணங்களையெல்லாம் கண்டுவிட்டு பாபாவை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, "நான் தங்கள் தரிசனத்தால் பெருமகிழ்ச்சியடைகிறேன். எப்போதும் என்பால் அன்புகொண்டு தயவுள்ளவராக இருந்து என்னைக் காத்து இரட்சியுங்கள். தங்கள் பாதாம்புயத்தைத் தவிர பிறிதொரு கடவுள் எனக்கில்லை. தங்கள் பஜனையின்பாலும், பாதகமலங்களின்பாலும் என் மனம் எப்போதும் இலயித்து இருக்கட்டும். இவ்வுலகில் துன்பங்களிலிருந்து தங்களின் அருள் எங்களைப் பாதுகாக்கட்டும். நான் எப்போதும் தங்கள் நாமத்தையே உச்சரிக்க வேண்டும். மகிழ்வுடன் இருக்கவேண்டும்" என்று வேண்டினார்.
(தொடரும்…)

No comments :
Post a Comment