Wednesday, 15 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 31 - பகுதி 1

No comments

முன்னுரை:-

தனது மரணத் தறுவாயில் ஒருவனுக்குள்ள ஆசை அல்லது எண்ணம் அவனது எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.  கிருஷ்ணரும் கீதையில், "எவன் என்னை முடியுந்தறுவாயில் எண்ணுகிறானோ, அவன் உண்மையில் என்னிடமே வருகிறான்.  அத்தருணத்தில் வேறெதையும்பற்றி எண்ணுபவன் அவன் விரும்பியபடியே செல்கிறான்" என்று கூறுகிறார்.  நமது கடைசித் தறுவாயில் ஒரு குறிப்பிட்ட நல்லெண்ணத்தை நினைவில்கொள்ளவேண்டும் என்பதில் நாம் நிச்சயமாக இருக்கமுடியாது.  இல்லை என்பதைவிடப் பெரும்பாலும் பல்வேறு காரணங்களால் நாம் பயந்து பீதியடைய அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

எனவே எப்போதாவதோ அல்லது நமது கடைசித் தருணத்திலோ கொள்ளவேண்டிய நாம் விரும்புகிற புனித நினைவுகளை நம் மனதில் நிலைப்படுத்த நிலையான பயிற்சி அவசியம்.  எனவே கிளம்புவதற்கான இறுதிநேரம் வந்தபோது குழப்பம் அடையாமல் இருப்பதற்காக, எப்போதும் இறைவனை நினைவுகூர்ந்து அவனது நாமத்தைச் சதாகாலம் உச்சரிக்குமாறு எல்லா ஞானிகளும் போதிக்கிறார்கள்.  அடியவர்கள் தம்மைத்தாமே முழுமையாக ஞானிகளிடம் அர்ப்பணித்து விடுகிறார்கள்.  சர்வமும் அறிந்த ஞானிகள் அவர்களது கடைசிக் காலத்தில் அவர்களை வழிநடத்தி உதவுவார்கள் என்ற நம்பிக்கைதான் அதற்குக் காரணம்.  இம்மாதிரியான சில நிகழ்சிகள் பின்வருமாறு:

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)

No comments :

Post a Comment