ஒருமுறை இந்த கூட்டத்திலிருந்தபோது ஹேமத்பந்த் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டார். அப்போது பாபா அவருக்கு ஒரு கிண்ணத்தில் மோர் கொடுத்தார். அதன் வெள்ளையான தோற்றம் அவரை மகிழ்வித்தது. ஆனால் வயிற்றில் அதற்கு இடம் இருக்காது என்று அஞ்சி லேசாக உறிஞ்சினார். மிகவும் சுவையாக இருந்தது. அவரது தடுமாறும் எண்ணத்தைப் புரிந்துகொண்ட பாபா, "எல்லாவற்றையும் குடித்துவிடு. இனிமேல் இம்மாதிரி வாய்ப்பு உனக்குக் கிடைக்காது" என்று கூறினார். அப்போது ஹேமத்பந்த் அதை முழுக்கவும் பருகினார். பாபாவின் உரை தீர்க்கதரிசனமானது என்று கண்டார். ஏனெனில் பாபா சீக்கிரத்தில் மஹாசமாதியடைந்தார்.
இப்போது வாசகர்கள் ஹேமத்பந்துக்கு நிச்சயம் நன்றி செலுத்த வேண்டும். அவர் கிண்ணத்தில் இருந்த மோரை அருந்தினார். ஆனால் பாபாவின் லீலைகள் என்ற ரூபத்தில் வேண்டிய அளவு அமிர்தத்தை நமக்கு விநியோகித்தார். பற்பல கிண்ணங்கள் அமிர்தத்தை நாம் பருகுவோம், திருப்தியடைந்து மகிழ்வோம்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment