இப்போது வாசகர்கள் மற்றொரு கதையைக் கேளுங்கள். வாமன் நார்வேகர் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவர் பாபாவை மிகவும் நேசித்தார். அவர் ஒருமுறை ஒரு நாணயம் கொண்டுவந்தார். அதன் ஒரு பக்கத்தில் ராமர், சீதா, லக்ஷ்மணர் ஆகியோரின் உருவங்களும், மற்றொரு பக்கத்தில் கூப்பிய கரங்களுடன் ஆஞ்சநேயர் உருவமும் பொறிக்கப்பட்டிருந்தது. அதை பாபா தமது ஸ்பரிசத்தால் புனிதப்படுத்தி உத்தியுடன் திருப்பி அளிக்கவேண்டுமென்ற எண்ணத்தில் பாபாவுக்கு அதை அவர் அளித்தார். ஆனால் பாபா உடனே அதைத் தம் பாக்கெட்டிற்குள் போட்டுக்கொண்டுவிட்டார். வாமன்ராவின் என்னத்தை ஷாமா பின்னர் பாபாவுக்கு தெரிவித்து அதைத் திருப்பியளிக்க வேண்டினார்.
பாபா பின்னர் வாமன்ராவின் முன்னிலையில் இவ்வாறு பேசினார். "அது ஏன் அவருக்குத் திருப்பியளிக்கப்படவேண்டும்? அதை நாமேதான் வைத்துக்கொள்ளவேண்டும். அதற்காக ரூ.25 கொடுத்தாரானால் அது திருப்பியளிக்கப்படும்". வாமன்ராவ் ரூ.25 சேகரித்து அவற்றை பாபாவின் முன்னிலையில் வைத்தார். பின்னர் பாபா, "அந்த நாணயத்தின் மதிப்பு 25 ரூபாயைவிட மிகமிக அதிகமாகும். ஷாமா இந்த ரூபாயை எடுத்து நமது ஸ்டோரில் வைத்துக்கொள். நாணயத்தை உனது பூஜை அறையில் வைத்து வழிபடு" என்றார்.
பாபா இம்மாதிரியான செயலை ஏன் பின்பற்றினார் என்பதைக் கேட்க ஒருவருக்கும் தைரியமில்லை. ஒவ்வொருவருக்கும் எது மிகச்சிறந்தது, மிகப் பொருத்தமானது என்பதை பாபா மட்டுமே அறிவார்.


No comments :
Post a Comment