யார் இந்த 'நான்':
பலமுறை சாய்பாபா யார் இந்த நான் என்பதை விளக்கியிருக்கிறார். அவர் கூறினார், "நீங்கள் தொலைதூரமோ அல்லது எங்கெங்கேயோ என்னைத் தேடிக்கொண்டு போகவேண்டாம். உங்களது நாமத்தையும், ரூபத்தையும் நீக்கினால் உங்களுக்கும், அதைப்போன்று அனைத்து ஜீவராசிகளுள்ளும் உளதாயிருக்கும் உணர்வு அல்லது ஸ்தாபிக்கப்பெற்றிருக்கும் உணர்வுநிலை காணப்பெறுகிறது. அது நானேயாகும். இதை உணர்ந்துகொண்டு உங்களிடத்தும், எல்லா ஜீவராசிகளிடத்தும் என்னைக் காண்பீர்களாக. இதை நீங்கள் பயிற்சிப்பீர்களானால் சர்வ வியாபகத்தை உணர்ந்து என்னுடன் ஒன்றாகும் நிலையை நீங்கள் பெறுவீர்கள்".
எனவே வாசகர்களுக்கு ஹேமத்பந்த் வணக்கம் தெரிவித்துவிட்டு எல்லாத் தெய்வங்களையும், ஞானிகளையும், பக்தர்களையும் மரியாதை செய்யும்படி பணிவுடனும், அன்புடனும் வேண்டிக்கொள்கிறார். "எவனொருவன் பிறர்மீது குறைகூறி குற்றங்கண்டு குதர்க்கம் செய்கிறானோ, அவன் என்னை உள்ளத்தில் துளைத்துக் காயமேற்படுத்துகிறான். ஆனால் எவன் கஷ்டப்பட்டுப் பொறுமையுடன் இருக்கிறானோ, அவன் என்னை மிக அதிகமாக சந்தோஷப்படுத்துகிறான்" என்று பாபா அடிக்கடி கூறியதில்லையா?
பாபா இங்ஙனம் எல்லா ஜந்துக்களிடமும், ஜீவராசிகளிடமும் வியாபித்து அவைகள்பாலும், எல்லாத் திசைகளிலும் சூழ்ந்து இருக்கிறார். எல்லா உயிர்களிடமிருந்தும், அன்பைத் தவிர வேறெதையும் அவர் விரும்புவதில்லை. இத்தகைய புனிதமான அமிர்தம் எப்போதும் பாபாவின் திருவாயினின்று பெருக்கெடுத்தது. அவர்தம் புகழை அன்புடன் பாடுவோர், அதையே பக்தியுடன் கேட்போர் ஆகிய இருவரும் சாயியிடம் ஒன்றாகிவிடுகிறார்கள்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment