Tuesday, 14 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 29 - பகுதி 5

No comments

புனிதமாக்கப்பட்ட நாணயம்:-

பாபாவின் ஸ்பரிசத்தால் புனிதமாக்கப்பட்ட நாணயம் ஒன்று தன் வீட்டில் இருக்கவேண்டுமென பிறிதொரு சமயத்தில் கேப்டன் ஹாடே விரும்பினார்.  ஷீர்டிக்குப் போய்க்கொண்டிருந்த நண்பர் ஒருவரைச் சந்தித்தார்.  அவரிடம் தமது நாணயத்தை அனுப்பினார்.  அந்த நண்பர் ஷீர்டிக்குச் சென்று நமஸ்கரித்தபின் முதலில் தமது ரூபாயைத் தஷிணையாக அவர் பாபாவுக்கு அளித்தார்.  அதை அவர் வாங்கி சட்டைப்பையில் போட்டுக்கொண்டார்.  பின் நண்பர் ஹாடேயின் நாணயத்தைக் கொடுத்தார்.  அதை பாபா வாங்கி உற்றுப்பார்த்துவிட்டு, தமது வலதுகை கட்டைவிரலால் சுண்டிவிட்டு பிடித்து விளையாடினார்.

பின் அந்த நண்பரிடம் அவர் "உதிப் பிரசாதத்துடன் இதை அதன் உரிமையாளரிடம் திரும்பக்கோடு.  அவரிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டியதில்லை என்று கூறு.  அமைதியுடனும், திருப்தியுடனும் அவரை வாழச்சொல்" என்று கூறினார்.  அந்த நண்பர் குவாலியருக்குத் திரும்பி புனிதமாக்கப்பட்ட நாணயத்தை ஹாடேயிடம் திரும்ப அளித்து, ஷீர்டியில் நிகழ்ந்த எல்லாவற்றையும் அவருக்குக் கூறினார்.  இம்முறை ஹாடே மிகவும் மகிழ்ந்து, பாபா எப்போதும் தாம் விரும்பிய மாதிரியான நல்ல எண்ணங்களை ஊக்குவிக்கிறார் என்று உணர்ந்தார்.  பாபாவும் அதையே முறையாக நிறைவேற்றினார்.

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                (தொடரும்…)

No comments :

Post a Comment