Wednesday, 22 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 42 - பகுதி 4

No comments
லக்ஷ்மிபாயிக்குத் தானம்:-

எல்லா இந்துக்களாலும் தசரா அல்லது விஜயதசமி மிகமிகப் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது.  பாபா தமது எல்லைக்கோட்டைத் தாண்டுவதற்கு இந்நாளைத் தேர்ந்தெடுத்தது பொருத்தமேயாகும்.  இதற்குச் சில நாட்களுக்கு முன்னர் அவர் துன்புற்றார் என்றாலும் எப்போதும் அவர் உள்ளுணர்வுடன் இருந்தார்.

கடைசித் தருணத்திற்குச் சிறிது முன்னரே எவருடைய உதவியுமின்றி நன்றாக நிமிர்ந்து அமர்ந்து காட்சியளித்தார்.  பாபாவுக்கு அபாயம் நீங்கிவிட்டதென்றும் அவர் தேறி வருகிறாரென்றும் மக்கள் நினைத்தனர்.  தாம் விரைவில் காலமாகப் போவதை அவர் அறிந்திருந்தார்.  எனவே லஷ்மிபாய் ஷிண்டேவுக்கு தாம் ஏதும் தர்மம் செய்யவேண்டுமென்று நினைத்தார். 

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

(தொடரும்…)

No comments :

Post a Comment