Thursday, 23 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 44 - பகுதி 3

No comments
பாபாவின் அமுத மொழிகள்:-

அன்பும், கருணையும் உள்ள சாயிபாபா பலமுறை கீழ்கண்ட இனிய மொழிகளை மசூதியில் கூறியிருக்கிறார்.

"என்னை எவன் மிகவும் விரும்புகிறானோ, அவன் எப்போதும் என்னைக் காண்கிறான்.  என்னைவிட்டு நீங்கினால் இவ்வுலகமே அவனுக்கு சூன்யமாய்த் தோன்றுகிறது.  எனது கதைககளைத் தவிர பிறவற்றை அவன் கூறுவதில்லை.  இடையறாது என்னையே தியானித்து, என் நாமத்தையே அவன் ஸ்மரணம் செய்கிறான்.  முழுமையாக தன்னை என்னிடம் சமர்ப்பித்து, என்னையே எப்போதும் எவன் நினைவில் கொண்டிருக்கிறானோ அவனுக்கு நான் கடன்பட்டதாக உணர்கிறேன்.  அவனுக்கு விடுதலையை (தன்னையுணர்தல்) அளித்து எனது கடனைத் தீர்ப்பேன்.  என்னை நினைத்து, எனக்காக ஏங்குபவனையும், எதையும் முதலில் என்னை நினைக்காமல் உண்ணாதவன்பாலும் நான் சார்ந்திருக்கிறேன்.  இங்ஙனம் என்னிடம் வருபவன் ஆறு கடலுடன் ஒன்றாவதுபோல் என்னுடன் இரண்டறக் கலக்கிறான்.  பெருமையையும், அஹங்காரத்தையும் விட்டொழித்துவிட்டு எள்ளளவும் அவற்றின் அடையாளம் கூட இல்லாதபடி விலக்கி உங்கள் இதயத்தே அமர்ந்துகொண்டிருக்கிற என்னிடம் உங்களைப் பூரணமாகச் சமர்ப்பியுங்கள்!"

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

(தொடரும்…)



No comments :

Post a Comment