இந்த அத்தியாயம் பாபா மஹாசமாதியடைதலை விளக்குகிறது.
முன்னுரை:-
இவ்வுலக வாழ்க்கையின் பயத்தை குருவின் கிருபை என்ற ஒளி நீக்குவதை முந்தைய அத்தியாயத்தில் கொடுக்கப்பட்ட கதைகள் காண்பிக்கின்றன. முக்திக்கு வழி வகுக்கின்றன. நமது துன்பத்தை இன்பமாக மாற்றுகின்றன. சத்குருவின் பாதங்களை நாம் எப்போதும் நினைத்துக்கொண்டு இருப்போமானால், நமது துன்பங்கள் ஒரு முடிவுக்கு வருகின்றன. மரணம் தனது கொடுமையைத் தளர்த்திவிடுகிறது. இவ்வுலக வாழ்வின் துயரங்கள் நீக்கப்படுகின்றன. எனவே, தங்கள் நலத்தை விரும்புவோர் மனதைத் தூய்மைப்படுத்தும் சமர்த்த சாயியின் இக்கதைகளைக் கேட்கவேண்டும். ஆரம்பத்தில் ஹேமத்பந்த், டாக்டர் பண்டிட்டின் வழிபாட்டையும், அவர் பாபாவின் நெறியில் மூன்று பட்டைகள் இட்டதைப் பற்றியும் கூறுகிறார். ஆனால் இது அத்தியாயம் 11இல் முன்பே கூறப்பட்டுவிட்டதால், இவ்விடம் நீக்கப்பட்டுவிட்டது.

No comments :
Post a Comment