சன்ஸா (கோதுமைப் பணியாரம்):-
மத்தியான வேளையில் லக்ஷ்மிசந்த் உணவுக்காக அமர்ந்திருந்தபோது, ஒரு பக்தரிடமிருந்து பிரசாதமாகக் கொஞ்சம் சன்ஸாவை அவர் பெற்றார். மறுநாளும் அதை அவர் எதிர்பார்த்தார். ஆனால் ஒன்றும் பெறவில்லை. எனவே அதைப்பெற அவர் கவலையுற்றார். மூன்றாம் நாள் பாபாவிடம் ஆரத்தி நேரத்தின்போது என்ன நைவேத்யம் தான் கொண்டுவர வேண்டுமென ஜோக் கேட்டார். சன்ஸாவைக் கொண்டுவரும்படி பாபா கூறினார்.
பின் பக்தர்கள் இரண்டு பானை நிறைய சன்ஸாவைக் கொண்டுவந்தனர். லக்ஷ்மிசந்த் மிகவும் பசியை இருந்தார். அவர் முதுகில் கொஞ்சம் வலி இருந்தது. பாபா அப்போது, "நீ பசியாயிருப்பது நன்று. அதற்காகக் கொஞ்சம் சன்ஸாவை உட்கொள். முதுகு வழிக்கு ஏதாவது மருந்து போட்டுக்கொள்" என்று அவரிடம் கூறினார். பாபா மீண்டும் தம் மனதைப் படித்து, அங்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை உணர்த்தியது குறித்து அவர் மீண்டும் ஆச்சரியத்தால் தாக்கப்பட்டார். எத்தகைய சர்வவியாபியாக பாபா இருக்கிறார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment