ஈரானியப் பெண்:-
ஒரு ஈரானிய கனவானுடைய அனுபவத்தை இப்போது படியுங்கள். அவரது சிறு மகளுக்கு ஒவ்வொரு மணிக்கும் வலிப்பு வந்தது. அப்போது அவள் பேசும் சக்தியை இழந்தாள். அங்கங்கள் குறுகி உணர்வின்றிக் கீழே சாய்ந்தாள். எந்த சிகிச்சையும் அவளுக்கு எவ்வித குணத்தையும் அளிக்கவில்லை.
பாபாவின் உதியைச் சில நண்பர்கள் அவளது தந்தைக்குச் சிபாரிசுசெய்து அதை பம்பாயில் விலேபார்லேயில் உள்ள காகா சாஹேப் தீஷித்திடம் இருந்து பெறும்படி கூறினார்கள். பின்னர் ஈரானிய கனவான் உதியைப்பெற்றுத் தினந்தோறும் அதை நீரில் கலந்து தன் மகளுக்குக் கொடுத்தார். ஆரம்பத்தில் மணிக்கு ஒருமுறை வந்துகொண்டிருந்த வலிப்பு, ஏழு மணிக்கு ஒருமுறை வரத்தொடங்கியது. அதற்குச் சில தினங்களுக்குப் பின் அவள் முழுமையும் குணமடைந்தாள்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment