ஆலந்தி ஸ்வாமி:
பாபாவின் தரிசனத்தைப்பெற விரும்பிய ஒரு சாமியார் ஆலந்தியிலிருந்து ஷீர்டிக்கு வந்தார். தன் காதிலுள்ள கடுமையான வலியால் அவர் அல்லலுற்றார். அது அவரைத் தூங்க விடாமல் தடை செய்தது. இதற்க்காக அவர் ரணசிகிச்சை செய்யப்பட்டார். ஆனால் அது அவருக்கு எவ்விதப் பலனையும் அளிக்கவில்லை. இவ்வலி மிகவும் கடினமானதாய் இருந்தது. அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர் திரும்பிச் செல்லும்போது பாபாவின் அனுமதியைப் பெற வந்தார். அப்போது ஷாமா, ஸ்வாமிகளின் காது வலிக்கு ஏதாவது செய்யுமாறு பாபாவை வேண்டினார். "அல்லா அச்சா கரேகா!" எனக் கூறித் தேற்றினார். பிறகு ஸ்வாமிகள் புனேவுக்குத் திரும்பினார். ஒருவாரம் கழித்து ஷீர்டிக்குக் கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார். அதில் தனது காதுவலி மறைந்துவிட்டது என்றும், வீக்கம் இருந்தது என்றும், அவ்வீக்கத்தைப் போக்குவதற்காக பம்பாய்க்கு, ரணசிகிச்சை செய்துகொள்ளச் சென்று இருந்ததாகவும், ஆனால் டாக்டர் காதைச் சோதித்துவிட்டு ரணசிகிச்சை தேவையில்லை எனக்கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தார். பாபாவின் மொழிகளுக்கு அத்தகைய ஆற்றல் இருந்தது.

No comments :
Post a Comment