Wednesday, 1 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 13 - பகுதி 3

No comments

பாலா கண்பத் ஷிம்பி:

பாபாவின் மற்றொரு பக்தரான பாலா கண்பத் ஷிம்பி என்பவர், கொடியவிதத்தைச் சேர்ந்த மலேரியாவினால் மிகவும் கஷ்டப்பட்டார்.  எல்லாவித மருந்துகளையும், கஷாயங்களையும் உபயோகித்தார், பலனேதுமில்லை.  ஜூரம் சிறிதளவும் குறைந்தபாடில்லை.  அவர் ஷீரடிக்கு ஓடி பாபாவின் பாதங்களில் வீழ்ந்தார்.  பாபா இவ்விஷயத்தில் ஒரு நூதனமான செயல்முறையை அனுசரிக்கச் செய்தார்.  கொஞ்சம் சாதத்தைத் தயிருடன் கலந்து, லக்ஷ்மி கோவிலுக்கு முன்னால் உள்ள கருப்பு நாய்க்குக் கொடுக்கும்படி கூறினார்.  பாலாவுக்கு இதை எங்ஙனம் நிறைவேற்றுவதென்று புதிராக இருந்தது.  ஆனால் அவர் வீட்டிற்குப் போனவுடனேயே, தயிரையும் சாதத்தையும் கண்டார்.  அவை இரண்டையும் கலந்து லக்ஷ்மி கோவிலுக்கு அருகில் கொணர்ந்தார்.  அப்போது ஒரு கருப்பு நாய் வாலையாட்டிக்கொண்டு நிற்பதைக் கண்டார்.  நாயின் முன்னர் தயிருடன் கலந்த சாதத்தை வைத்தார்.  நாயும் அதை உட்கொண்டது.  ஆச்சர்யமாகவே, பாலா கண்பத் ஷிம்பி மலேரியாவிலிருந்து விடுபட்டார்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                (தொடரும்…)

No comments :

Post a Comment