Tuesday, 7 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 20 - பகுதி 1

No comments

முன்னுரை:-

சாயி (கடவுள்) முதலில் அருவமாய் இருந்தார்.  பக்தர்களுக்காக ஒரு ரூபத்தை அவர் புனைந்து கொண்டார்.  பிரபஞ்சம் என்னும் பெரும் நாடகத்தில் மாயை என்ற நடிகையின் உதவியுடன் அவர் நடிகரின் பாத்திரத்தை ஏற்று நடித்தார்.  நாம் சாயியை(கடவுளை) ஞாபகப்படுத்திக் கொள்வோம்.  அகக்காட்சியாக உருவாக்கிக் காண்போம்.  ஷீர்டிக்குச் சென்று மதிய ஆரத்திக்குப் பின் உள்ள நிகழ்ச்சிகளைக் கவனத்துடன் நோக்குவோம்.  ஆரத்திச் சடங்கு முடிந்த பின்னர் சாயிபாபா மசூதிக்கு வெளியில் வந்து அதன் விளிம்பில் நின்றுகொண்டு, மிகுந்த பட்சமும் அன்பும் கூடிய பார்வைகளுடன் பக்தர்களுக்கு உத்தியை வினியோகிப்பது வழக்கம்.  பக்தர்களும் அதேயளவு உணர்ச்சிவேகத்துடன் அவருடைய பாதங்களைப் பற்றிப் பிடித்துக்கொண்டனர்.  நின்றுகொண்டும், அவரை உற்று நோக்கிக்கொண்டும் உதிமழையை மகிழ்ந்தனுபவித்தார்கள்.  பாபா கைநிறைய உதியை பக்தர்களின் கைகளில் கொடுத்து அவர்களது நெற்றியில் தமது கைவிரல்களால் பூசிவிட்டார்.  அவர் தம்முடைய இதயத்தில் அவர்களுக்காகக் கொண்டிருந்த அன்பு எல்லையற்றது.  

பிறகு அவர் பக்தர்களை நோக்கிப் பின்வருமாறு அளவளாவினார்.  "ஓ! பாவ் சாப்பிடச் செல்லும், அண்ணா நீர் உமது இருப்பிடத்திற்குச் செல்லும்.  ஓ! பாபு உமது உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிடும்".  இவ்வாறாகவே ஒவ்வொரு பக்தரையும் அழைத்துப் பேசி அவர்களை வீட்டிற்கு அனுப்பினார்.  இப்போதும்கூட இக்காட்சிகளை உங்களது கற்பனையைத் தட்டிவிடுவதன் மூலம் நீங்கள் மகிழ்ந்து அனுபவிக்கலாம்.  நீங்கள் அவைகளைக் கண்டு இன்புறலாம்.  இப்போது சாயியை அவரது பாதங்களிலிருந்து முகம்வரை நமது மனத்தில் உருவகப்படுத்தித் தியானிப்போம்.  அவர் முன்னிலையில் தாழ்மையுடனும், அன்புடனும், மரியாதையுடனும் வீழ்ந்து பணிந்துவிட்டு இவ்வத்தியாயத்தின் கதைக்குத் திரும்புவோம்.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)




No comments :

Post a Comment