Wednesday, 8 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 22 - பகுதி 3

No comments

பாபு சாஹேப் பூட்டி:-

நானா சாஹேப் டேங்க்லே என்னும் பெரிய ஜோசியர் ஒருவர், அப்போது ஷீர்டியிலிருந்த பாபு சாஹேப் பூட்டியிடம் ஒருநாள், "இந்நாள் தங்களுக்கு ஒரு அமங்கலமான நாள், தங்களது உயிருக்கு ஆபத்து இருக்கிறது" என்று கூறினார்.  இது பாபு சாஹேபை இருப்புக்கொள்ளாமல் செய்தது.  அவர் வழக்கம்போல் மசூதிக்கு வந்தபோது பாபா, பாபு சாஹேபிடம், "இந்த நானா என்ன கூறுகிறார்?  அவர் உமக்கு மரணமென்று ஜோசியம் கூறுகிறார்.  நன்று, நீங்கள் பயப்பட வேண்டியதில்லை.  அவரிடம் தைரியத்துடன் சொல்லுங்கள், எங்ஙனம் சாவு கொல்கிறது என்பதைக் காண்போம் என்று கூறுங்கள்" என்று கூறினார்.  

பாபு சாஹேப் பிறகு மாலை நேரத்தில் இயற்கைக் கடன்களைச் செய்து முடிப்பதற்காகத் தனியிடத்திற்குச் சென்றார்.  அங்கு ஒரு பாம்பைக் கண்டார்.  அவரது சேவகன் அதைக் கண்டு அதை அடிப்பதற்காக ஒரு கல்லை எடுத்தான்.  பாபு சாஹேப் ஒரு பெரிய தடியை எடுத்து வரும்படி கூறினார்.  வேலையாள் தடியுடன் வரும் முன்பே பாம்பு நகர்ந்து சென்று எங்கோ மறைந்துவிட்டது.  பாபாவின், "அஞ்ச வேண்டாம்!" என்ற மொழிகளை பாபு சாஹேப் மகிழ்வுடன் நினைவுகூர்ந்தார். 

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                  (தொடரும்…)
 

No comments :

Post a Comment