முக்தாரம் என்ற ஒரு பக்தர் அந்த வாயில்லா ஜீவன் தப்பிச்சென்றது நல்லது என்று கூறினார். ஹேமத்பந்த் பாம்புகள் கொல்லப்படவே வேண்டும் என்று அவருக்குச் சவால் விட்டார். முன்னவர் பாம்பு போன்ற ஜந்துக்கள் கொல்லப்படக் கூடாதென்றும், பின்னவர் கொல்லப்பட வேண்டும் என்றும் இருவருக்குமிடையே சூடான விவாதம் நடந்தது. இரவு வந்ததும் விவாதம் எவ்வித முடிவுமின்றி முடிவடைந்தது. மறுநாள் இது பாபாவிடம் தெரிவிக்கப்பட்டது.
பாபா தமது தீர்க்கமான கருத்தைப் பின்வருமாறு தெரிவித்தார். தேளானாலும், பாம்பானாலும் கடவுள் எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் வசிக்கிறார். அவரே இவ்வுலகில் மிகப்பெரிய பொம்மலாட்டக்காரர். அனைத்து ஜீவராசிகளும் (பாம்பும், தேளும்) அவரின் ஆணைக்குக் கீழ்ப்படிகின்றன. அவர் நினைத்தாலொழிய யாரும், எதுவும் பிறருக்குத் தீங்கு செய்துவிட முடியாது. உலகம் அவரையே முழுவதும் சார்ந்திருக்கிறது. எவருமோ, எதுவுமோ சுதந்திரமானவர்களல்ல. எனவே நாம் கருணைகூர்ந்து எல்லா ஜீவராசிகளையும் நேசிக்கவேண்டும். துணிச்சல், வீரமுள்ள கொலைகளையும், சண்டைகளையும் விடுத்துப் பொறுமையாய் இருக்கவேண்டும். கடவுளே அனைவரின் பாதுகாப்பாளர்.

No comments :
Post a Comment