முன்னரே குறிப்பிட்ட காரணங்களால் சாயிபாபாவை நாம் ஒரு அவதாரமாகவே கருதுகிறோம். ஆனால் தான் கடவுளின் பணிவுள்ள ஒரு சேவகன் என்றே அவர் எப்போதும் கூறினார். அவர் தாமே ஓர் அவதாரமானபோதும்கூட எங்ஙனம் திருப்தியான வகையில் மக்கள் நடந்துகொள்ளவேண்டும், வாழ்க்கையில் தாங்கள் தங்கள், பணித்துறையிடத்திற்கேற்ற (வருணாஸ்ரம தர்மத்திற்கேற்ப) கடமைகளைச் செய்யவேண்டும் என்று வழி காண்பித்தார்.
அவர் ஒருபோதும் எந்த வகையிலும் மற்றவர்களைப் போட்டியிட்டு மேம்படும் முயற்சிகளைக் கொண்டதில்லை அல்லது தமக்காக ஏதேனும் செய்யும்படி அவர்களைக் கேட்டதில்லை. இவ்வுலகின் அசையும், அசையாப் பொருட்கள் யாவற்றிலும் கடவுளைக் கண்ட அவருக்குப் பணிவுடைமையே மிகவும் பொருத்தமானதொன்றாகும். ஒருவரையும் அவர் புறக்கணித்ததில்லை அல்லது மதிக்காமல் இருந்ததில்லை. நாராயணனை (கடவுளை) சர்வ ஜீவராசிகளிடமும் கண்டார். 'நான் கடவுள்' என்று ஒருபோதும் அவர் சொன்னதில்லை. ஆனால் தான் ஒரு பணிவுள்ள சேவகன் என்றும், எப்போதும் அவரை நினைவில் வைத்திருப்பதாகவும் கூறினார். 'அல்லா மாலிக்' (இறைவனே எஜமான்) என்று எப்போதும் உச்சரிப்பார்.
நல்வினைகளின் சேமிப்பு ஏதேனும் நமது கணக்கில் இருக்குமானால் முனிவர்களின் கதைகள் அல்லது லீலைகளைக் கேட்பதற்கு நமக்கு ஓர் ஆர்வம் அல்லது சுவாரசியம் ஏற்படுகிறது. அல்லாவிடில் கேட்பதற்கு ஆர்வம் எழாது. இந்த அத்தியாயத்தின் முக்கிய கதைகளுக்கு இப்போது திரும்புவோம்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment