Thursday, 9 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 23 - பகுதி 2

No comments

யோகமும் - வெங்காயமும்:-

நானா சாஹேப் சாந்தோர்கருடன் ஒருமுறை ஷீர்டிக்கு ஒரு யோகப் பயிற்சியாளர் (யோகா சாதகர்) வரும்படி நேரிட்டது.  பதஞ்சலியின் யோகசூத்திரங்கள் உள்ளிட்ட எல்லா யோகப் புத்தகங்களையும் அவர் கற்றிருந்தார்.  எனினும் யோகத்தில் நடைமுறை அனுபவம் ஏதும் அவருக்கு இல்லை.  தமது மனதை ஒருமுகப்படுத்தி குவிக்கவும், சமாதி நிலையை ஒரு சிறிதுநேரம் எய்தவும் அவரால் முடியவில்லை.  சாயிபாபா தம்பால் மகிழ்ச்சி அடைந்தாரென்றால், நீண்டநேரம் சமாதிநிலையை எய்துவதற்கு அவர் தமக்கு வழிகாட்டுவார் என்று நினைத்தார்.  உள்ளத்தில் இக்குறிக்கோளுடன் அவர் ஷீர்டிக்கு வந்தார். 

மசூதிக்கு அவர் சென்றபோது சாயிபாபா ரொட்டியை வெங்காயத்துடன் சாப்பிட்டுகொண்டிருப்பதைக் கண்டார்.  இதைக் கண்ணுற்ற அவருக்கு மனதில் ஓர் எண்ணம் எழுந்தது.  "மட்கிப்போன ரொட்டியுடன் பச்சை வெங்காயத்தை உண்டுகொண்டிருக்கும் இம்மனிதர் எங்ஙனம் எனது தொல்லைகளுக்கு விடைகண்டு எனக்கு உதவிசெயயமுடியும்?!"    

சாயிபாபா அவரது உள்ளத்தைப் படித்தறிந்து நானா சாஹேபை நோக்கிக் கூறினார், "ஓ! நானா, வெங்காயத்தை ஜீரணிக்கும் ஆற்றல் உள்ளவன் மட்டுமே அதை உண்ணவேண்டும். மற்ற ஒருவரும் அங்ஙனம் செய்யக்கூடாது".

இக்குறிப்பைக் கேட்ட யோகி ஆச்சரியத்தால் செயலிழந்தார்.  பின்னர் பூரணசரணாகதியுடன் பாபாவின் பாதங்களில் வீழ்ந்தார்.  தூய, திறந்த உள்ளத்துடன் தனது தொல்லைகளைக்  கேட்டு பாபாவிடமிருந்து அவைகளுக்கு விடையும் பெற்றார்.  இவ்வாறாகத் திருப்தியும், மகிழ்ச்சியும் அடையப்பெற்று பாபாவின் உதி ஆசீர்வாதங்களுடன் அவர் ஷீர்டியை விட்டுச்சென்றார்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)



No comments :

Post a Comment