Friday, 10 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 24 - பகுதி 1

No comments

முன்னுரை:-

சத்குருவின் பாதங்களில் நம் அஹங்காரத்தை சமர்ப்பித்தாலன்றி நமது வேலையில் வெற்றிபெறமாட்டோம்.  அஹங்காரத்தை ஒழித்தால் நமது வெற்றி உறுதியளிக்கப்படுகிறது.

சாயிபாபாவை வணங்குவதால் இகபர சௌபாக்கியம் இரண்டுமே கிடைக்கிறது.  நம் உண்மையான இயற்கையில் நிலையாக்கப்பட்டு அமைதியும், மகிழ்ச்சியும் அடைகிறோம்.  எனவே எவரொருவர் அவரது அவரது சுபிட்சத்தைப்பெற விரும்புகிறாரோ அவர் சாயிபாபாவின் லீலைகளையும், கதைகளையும் பக்தியுடன் கேட்கவேண்டும்.  அவைகளைத் தியானம் செய்யவேண்டும்.  இவைகளை அவர் செய்வாரேயானால் தமது வாழ்க்கையின் இலட்சியத்தை சுலபமாக அடைந்து பேரானந்தம் பெறுவார்.

பொதுவாக அனைவரும் தமாஷையும், வேடிக்கையையும் விரும்புவார்கள்.  ஆனால் தங்களைப் பொருளாக வைத்து தமாஷ் செய்யப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை.  ஆனால் பாபாவின் வழியோ விசித்திரமானது.  அவைகள் அபிநயத்துடன் சேரும்போது பொதுமக்களுக்கு மிகவும் ஆர்வமூட்டுவதாகவும், அறிவுரை தருவதாகவும் இருக்கின்றன.  எனவே கேலிக்கு அவர்கள் இலக்காயினும் பொருட்படுத்துவதில்லை.  ஹேமத்பந்த் தனது சொந்த அனுபவத்திலேயே கீழே குறிப்பிடுகின்றார்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)


No comments :

Post a Comment