சாயிபாபா எப்போதுமே கருணை நிறைந்தவராக இருக்கிறார். அவர்பால் முழுமனதான பக்தியே நம்மைப் பொறுத்தவரை தேவைப்படுவதாகும். உறுதியான நம்பிக்கையும், பக்தியும் ஒரு பக்தன் பெறும்போது அவனது விருப்பங்கள் விரைவில் நிறைவேறுகின்றன. சாயிபாபாவின் வாழ்க்கையையும், லீலைகளையும் எழுதவேண்டுமென்ற ஆர்வம் ஹேமத்பந்தின் உள்ளத்தில் எழுந்தபோது அதை உடனே அவரைக்கொண்டு எழுதிமுடிக்கச் செய்தார். குறிப்புகள், ஞாபகங்கள் இவைகளை வைத்துக்கொள்ள உத்தரவு கொடுக்கப்பட்டபோது, ஹேமத்பந்த் உணர்வூட்டப்பெற்றார். அவரது அறிவு, வேலையை மேற்கொண்டு முடிப்பதற்கு வேண்டிய உறுதியும், தைரியமும் பெற்றது.
இப்பணியை மேற்கொள்ளத் தாம் தகுதியுடியவரல்ல என்றும், ஆனால் பாபாவின் அருள் நிறைந்த ஆசீர்வாதங்களே மேற்கொண்ட பணியை சம்பூர்ணம் செய்வதற்கு அவரை ஊக்குவித்தது என்றும் அவர் கூறினார். எனவே சத்சரிதம் என்ற இக்கிணற்றிலிருந்து அல்லது நீர்த்தேக்கத்தினின்று அல்லது சோமகாந்தக்கல்லிலிருந்து சாயி லீலைகள் என்ற ரூபத்தில் அமிர்தம் ஊறி வருகிறது. படிப்போர் அதை மனதாறப் பருகுகிறார்கள்.

No comments :
Post a Comment