விட்டல் காட்சி:-
ஒருநாள் காகா சாஹேப் தீஷித் ஷீர்டியில் உள்ள தனது வாதாவில் காலைக் குளியலுக்குப்பின் தியானம் செய்துகொண்டிருக்கும்போது விட்டலின் தெய்வீகக் காட்சி ஒன்று கிடைத்தது. அதன் பின்பு பாபாவை அவர் காணச் சென்றபோது, "விட்டல் பாடீல் வந்தாரா? நீர் அவரைக் காணவில்லையா? அவர் மிகவும் நழுவேல் பேர்வழி. இறுக்க அவரைப் பிடித்துக்கொள்ளும், இல்லாவிட்டால் உமக்கு 'டேக்கா' கொடுத்துவிட்டு ஓடிப்போய் விடுவார்" என்று கூறினார் பாபா. பின்னர் மத்தியான வேளையில் பண்டரீபுரத்து விட்டலின் 20-25 படங்களுடன் ஒரு வியாபாரி வந்தான். தான் தியானத்தில் கண்ட விட்டலின் உருவத்துடன் இது அப்படியே அச்சாகப் பொருந்தியிருப்பது கண்டு தீஷித் அதிசயமடைந்தார். பாபாவின் மொழிகளை நினைவு கூர்ந்து, மிகுந்த விருப்பத்துடன் ஒரு படத்தை வாங்கி, தனது பூஜையறையில் வழிபாட்டுக்காக வைத்தார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment