Sunday, 12 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 27 - பகுதி 5

No comments

கீதா ரஹஸ்யம்:-

பிரம்ம வித்தையைக் கற்பவர்களை பாபா எப்போதும் நேசித்தார்.  அவர்களை ஊக்குவித்தார்.  உதாரணத்துக்கு ஒன்று, ஒருமுறை பாபு சாஹேப் ஜோக் ஒரு பார்சலைப் பெற்றார்.  லோகமான்ய திலகர் எழுதிய கீதாரஹஸ்யத்தின் ஒரு பிரதி அதனுள் இருந்தது.  தனது அக்குளில் அதை வைத்தவாறு மசூதிக்கு வந்து அவர் பாபாவின் முன் வீழ்ந்து பணிந்தபோது பார்சல் பாபாவின் பாதத்தில் சென்று விழுந்தது.  பாபா அது என்ன என்று விசாரித்தார்.  அவ்விடத்திலேயே பார்சல் உடைக்கப்பட்டு அப்புத்தகம் பாபாவின் கரத்தில் வைக்கப்பட்டது.  இங்குமங்குமாக அதன் சில பக்கங்களை அவர் புரட்டிவிட்டுத் தமது பையிலிருந்து ஒரு ரூபாயை எடுத்து அதன்மீது வைத்து, அதை ஜோகிடம் அளித்து, "இதை முழுமையும் படி, உனக்கு நன்மை விளையும்" என்றார்.

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)

No comments :

Post a Comment