பாபாவின் சிறப்பான குணாதிசயங்கள்:
தங்களது வீட்டைத் துறந்து காடுகளில், குகைகளில், துறவி மடங்களில் தனிமையில் இருந்துகொண்டு, தங்களுக்கே விடுதலை அல்லது பரகதி தேட முயற்சிக்கும் பல முனிவர்கள் உள்ளனர். மற்றவர்களைப் பற்றி அவர்கள் கவலைப் படுவதில்லை. எப்போதும் அந்தராத்மாவிலேயே தம்மை மறந்து மூழ்கி இருப்பார்கள். சாயிபாபா அவ்வகையைச் சார்ந்தவர் அல்ல. அவருக்கு வீடில்லை, மனைவி இல்லை, மக்களில்லை, சேய்மை அண்மைய உறவினர்கள் யாருமே இல்லை. எனினும் அவர் இவ்வுலகில் (சமூகத்தில்) வாழ்ந்தார். நாலைந்து வீடுகளிலிருந்து தமது உணவை அவர் இரண்டு உண்டு, எப்போதும் வேப்பமரத்தடியிலேயே வாழ்ந்தார்.
உலக விவகாரங்களை நடத்திக்கொண்டு, மக்களுக்கு உலகில் எங்ஙனம் நடக்கப் பழகவேண்டுமெனப் போதித்தார். கடவுள் காட்சியைப் பெற்றபின் மக்களின் சுபிட்சத்துக்காகப் பாடுபடும் முனிவர்களையோ, சாதுக்களையோ காண்பதரிது. சாயிபாபா இவர்களிலெல்லாம் தலையாயவர். எனவே ஹேமத்பந்த் பின்வருமாறு கூறுகிறார்.
"இத்தகைய அசாதாரணமான, அறிவெல்லைகடந்த, விலைமதிப்பற்ற, தூய்மையான மாணிக்கக்கல் (சாயிபாபா) அவதரித்த நாடு ஆசீர்வதிக்கப்பட்டது. குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டது. தூயவர்களாகிய அவரின் பெற்றோர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்."
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment